பின்பு கமலின் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தங்கள் தலைவரிடம் 3 மணி நேரம் விசாரணை செய்த போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. கமலஹாசனின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழக அரசு போலீசார் மூலம் விசாரணை என்ற பெயரில் அவமதிப்பதாகும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நடிகர் கமல் விசாரணைக்கு சென்றது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும் என்று கமலுக்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.