இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திரௌபதி படம் குறித்து பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் திரௌபதி என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சேலம் மாவட்டம் , ஓமலூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , திரெளபதி திரைபடத்தை தடை செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துகொண்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திரெளபதி திரைபடத்தை தடை செய்யக்கோரி விசிகவினர் நடத்திய போராட்டம் குறித்து நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் "குற்ற உணர்வு" (Guilty)என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.