Skip to main content

விஜய் வீட்டில் நடந்த ரெய்ட்... விஜய்க்கு நெருக்கடி கொடுக்க காரணம்... பாஜக போட்ட அதிரடி திட்டம்! 

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

எல்லோருடைய கவனத்தையும் 12-ந் தேதி தன் பக்கம் திருப்பிய ரஜினி, தமிழகத்தில் அரசியல் எழுச்சி வரட்டும். அது வரை காத்திருக்கிறேன்னு அறிவித்து, பல்வேறு விமர்சனங்களை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தினார். அதேபோல் அவர் எந்த லீலா பேலஸ் ஓட்டலில் இந்த அறிவிப்பை வெளியிட்டாரோ, அதே ஓட்டலில் தன் "மாஸ்டர்' பட ஆடியோ லாஞ்சை நடத்தும் ஆயத்தத்தில் இருந்த நடிகர் விஜய் வீட்டில்... அதே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது என்கின்றனர். 

ஏற்கனவே கடந்த மாதம் 6-ந் தேதி நடிகர் விஜய்யைக் குறிவைத்து, அவர் வீட்டிலும் மதுரை ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் வீட்டிலும், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அலுவலகத்திலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. அப்போது அன்புச்செழியன் வீட்டில் மட்டும் 77 கோடி ரூபாய் அளவுக்குக் கறுப்புப் பணம் பிடிபட்டது. அது தமிழக அரசியல் மேலிடங்களின் பணம் என்பதால் பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. விஜய் வீட்டில், அவர் வாங்கிய ஊதியத்துக்கெல்லாம் உரிய கணக்கை சரியாக வைத்துள்ளார். அப்போது அங்கிருந்து அபவுட்டர்ன் ஆன வருமான வரித்துறை அதிகாரிகள், மறுபடியும் 12-ந் தேதி விஜய் வீட்டில் ஆய்வு நடத்தினர்.
 

vijay



மேலும் முதலில் விஜய் நடித்த  "பிகில்' படத்தைக் குறிவைத்தவர்கள். தற்போது அவரோட "மாஸ்டர்' படத்தைக் குறிவைத்திருப்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு, நடிகர் ரஜினி மீது போட்ட வருமானவரித்துறை வழக்கை, தானாக அந்தத் துறை அதிகாரிகளே வாபஸ் வாங்கி விட்டார்கள். காரணம், அவர் தேசிய சட்டத் திருத்த மசோ தாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து டெல்லியின் மனசைக் குளிரவைத்தார் என்கின்றனர். இது போன்ற எந்த முயற்சியையும் விஜய் மேற்கொள்ளவில்லை. அவருக்கு சிறு பான்மை மக்கள் மத்தியில் இருக்கும் இமேஜும், இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பலமான ஆதரவும் பா.ஜ.க.வின் கண்ணை உறுத்துவதாக சொல்லப்படுகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த அவர், காங்கிரஸோடு தொடர்பில் இருப்பதாகவும் டெல்லிக்குத் தகவல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை சட்ட மன்றத் தேர்தல் நேரத்தில் அவர் காங்கிரஸுக்கு ஆதரவாகவோ, அதன் கூட்டணித் தலைமையான தி.மு.க.வுக்கு ஆதரவாகவோ குரல்கொடுத்தால் என்ன பண்றது என்று நினைத்து தான், முன்னதாகவே அவரை டெல்லி முடக்கிவைக்க நினைப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித் ஜெயின் வீட்டில் முதல்நாள் ரெய்டை நடத்திவிட்டு, மறுநாள் விஜய்யின் பனையூர் வீட்டை ஆய்வு செய்தார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளோ, "மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் என்பதால் அவரை சோதனை செய்தோம். விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது, ஒரு வெரிபிகேஷனுக்காகத்தான் என்று சொல்கிறார்கள். விஜய் மட்டும் மாஸ்டர் ஆடியோ ரிலீஸில், குடியுரிமை சட்ட மசோதாவையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஆதரித்து  பேசட்டும். நிலவரம் மாறி விடும் என்று பேசுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.