தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருகிற நிலையில், தேசிய கட்சிகள் பொங்கல் விழாவை முக்கிய நிகழ்வாக பார்க்கிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக பொங்கல் நிகழிச்சியை கொண்டாடி வருகிறது.

Advertisment

அந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் அணி பிரிவு சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், அத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளரும் மாநில மீனவர் அணி தலைவருமமான சதீஷ்குமார் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். நடிகை குஷ்பூ, மீனவ பெண்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும் அந்த பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

வருகிற 14 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டில் தேசிய கட்சி தலைவர்களான பாஜகவை சேர்ந்த ஜே.பி நட்டாவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியும் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.