Skip to main content

கருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

 

actor and political leader karunas vehicle stopped by cops

 

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.-வும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் 'தேசிய தெய்வீக' யாத்திரை என்ற பெயரில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கினார்.


சென்னையில் இருந்து புறப்பட்ட அவரது யாத்திரைப் பயணம் உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியே பல மாவட்டங்களைக் கடந்து மதுரையில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, அவரது பயணம் சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வந்து சேர்ந்தது. அப்போது போலீசார் அவரது வாகனத்தை மறித்தனர். அப்போது எம்எல்ஏ கருணாஸ், 'ஏன் எங்கள் காரை மறிக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு போலீசார் 'உங்களுக்கு யாத்திரை செல்ல அனுமதி இல்லை' என்று கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் கருணாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

actor and political leader karunas vehicle stopped by cops

 

இதையடுத்து, கருணாஸுடன் வந்த அவரது தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அங்கு விரைந்து வந்த திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கருணாஸ், 'எங்கள் வாகனம் யாத்திரையாகச் செல்வதற்கு முறையாக அனுமதி பெற்றே செல்கிறோம்' எனக் கூறினார். ஆனால், போலீசார் அவர் யாத்திரையாக வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், யாத்திரையாகச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் 'தேசிய தெய்வீக' யாத்திரை என்ற பெயரில் தாங்கள் யாத்திரை செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர்.

 

அப்போது, கருணாஸ் சென்னையில் தொடங்கிய இந்தப் பயணத்தின் நோக்கம் 'முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களைச் சந்திப்பது', 'முக்குலத்தோரின் முக்கியக் கோரிக்கையான 25 சதவீத இட ஒதுக்கீடை வழங்க வேண்டும்' என வலியுறுத்துவது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டி தொடங்கப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால், என்னுடன் வந்த வாகனத்தில் தேசிய தெய்வீக யாத்திரை என்று வாசகம் இடம் பெற்றுள்ளதால் அந்த வாசகம் இருக்கக் கூடாது எனக் காவல்துறையினர் தெரிவித்ததோடு எங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலோ அல்லது பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளமாட்டோம்.

 

ஜெயலலிதாவிடம் என்னை அறிமுகம் செய்தவர் சசிகலா. இதனால் சசிகலா மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அவர் உடல் நலம்பெற்று சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் சிகிச்சை முடிந்து வந்ததும் நேரில் சென்று சந்திப்பேன். தற்போதும் நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம். முதலமைச்சரை நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. எனது ஆறு நாள் பயணம் முடிந்ததும் எங்களது கோரிக்கை அடங்கிய மனுவை முதலமைச்சரை சந்தித்துக் கொடுக்க உள்ளேன். அரசு இந்தச் சமுதாயம் சார்ந்த மக்களின் கோரிக்கைக்கு காது கொடுக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

 

முக்குலத்தோர் புலிப்படை தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தினம் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பதே அவரின் திட்டம்'-கருணாஸ் பரப்புரை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'His plan is to lie 10 days a day' - Karunas lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.

Next Story

‘துரோக அதிமுக; பாசிச பாஜக; இதுதான் சரியான நேரம்’ - கருணாஸ் எடுத்த முடிவு

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Treacherous AIADMK; Fascist BJP'; This is the right time' - Karunas decided

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பாஜக கூட்டணியில் தற்போது வரை ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணியாக இணைய வேண்டியிருக்கிறது. பாஜக வென்றால் மோடி ஆட்சி இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.