Advertisment

 டிசம்பர்லியே இப்படீன்னா மே மாசம்... சீமானை கலாய்த்த பாஜகவின் எஸ்.வி.சேகர்! 

சமீபத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமவளவனைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் "நிறைய அசிங்கமான பொம்மைகள் இருக்கிற இடத்தை ஆசையோட பாக்க வந்த அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க" என்று கருத்து தெரிவித்து இருந்தார். அதன் பின்பு ஒருவர் கிறிஸ்துமஸ் ட்ரீ முன்பு கையில் ஒரு பந்துடன் பேசும் போது அவர் பின்னாடி இருந்த கிறிஸ்துமஸ் ட்ரீ எதிர்பாராத விதமாக அவர் மீது விழுந்தது. இந்த நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கன்யாகுமாரியில் ஆரம்பித்த வியாபாரக் கூட்டணி தூத்துக்குடியில் பிளந்து,புதுக்கோட்டையில் முறிந்து சென்னையில் வேரோடு விழுந்தது என்று பதிவிட்டு இருந்தார்.

Advertisment

ntk

இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் பற்றி ஹிலாரி கிளிண்டன் பேசியதை என்னிடம் ஜெயலலிதா தெரிவித்தார் என்று சீமான் கூறியுள்ளார். சீமானின் இந்த கருத்துக்கு பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், இதுவரைக்கும் உயிரோட இருக்கறவங்க கிட்ட பேசின தவகவலே இல்லயே ஆவி உலக தம்பியிடம். Great. டிசம்பர்லியே இப்படீன்னா மே மாசம் ??? இன்னொரு அருணன் என்று பதிவிட்டுள்ளார். எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

controversy politics S.V.sekar seeman ntk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe