Skip to main content

‘தல போல வருமா’... -அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய திமுக எம்எல்ஏ 

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
actor ajith kumar - trb rajaa

 

 

நடிகர் அஜித்குமாரை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்எல்ஏ, அனைத்து பிரபலங்களும் அவரை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.ராஜா. இவர் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். திமுகவைச் சேர்ந்த இவர், நடிகர் அஜித்குமார் ரேசிங் விளையாட்டு மீது வைத்திருக்கும் ஆர்வம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் பேசிய காணொலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அந்த பதிவில் ரேசிங் மீதான வேட்கை, அவரது இதயத்தில் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது எனவும், அவரை போன்று மற்றவர்களும் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ajith

 

மேலும், அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும், ‘தல போல வருமா’, ‘தல அஜித்’ என்ற வாசகங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

பொதுவாக அதிமுக, அஜீத் மீது ஒரு பார்வை வைத்திருக்கிறது. நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து சொல்லுபவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். திமுக எம்எல்ஏவின் இந்த பாராட்டு, சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் அஜித் ரசிகர்களை கவருவதற்கான யுக்தியாகக் கூட இருக்கலாம். அஜித் இன்று நேற்று அல்ல, ஆரம்பம் முதலே பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் இவற்றில் ஆர்வம் உள்ளவர். திடீரென்று தற்போது பாராட்ட காரணம், அவரது ரசிகர்களை கவருவதற்காகவே என்று சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.