
அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
பூத் கமிட்டியின் செயல்பாடுகள் எந்த வகையில் இருக்கிறது ? என்பதை அவர்களிடம் ஆய்வு செய்தார் அவர். பெரும்பாலான மாவட்டங்களில் பூத் கமிட்டியின் பணிகளில் தொய்வு இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது குறித்து கூட்டத்தில் பேசிய அவர், " பூத் கமிட்டியை விரைந்து அமைத்து முடிக்க வேண்டும். ஜூன் மாதத்திற்குள் பணிகளை முழுவதுமாக முடித்து அது குறித்த ரிப்போர்ட்டினை தலைமைக் கழகத்தில் கொடுக்க வேண்டும் " என்று உத்தரவுட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
மேலும், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கருத்துக்களையும் உள் வாங்கிக் கொண்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்கள் முழுவதுமாக ஆய்வு செய்தார்.பூத் கமிட்டி தான் மிகப்பெரிய கட்டமைப்பு . அதை சரியான முறையில் செய்ய வேண்டும். இனி ஒரு முறை இதே பிரச்சனைகள் குறித்து நாம் மீண்டும் விவாதிக்கிற சூழலை உருவாக்கக்கூடாது என்றும் அழுத்தமாக அறிவுறுத்தினார்.