Skip to main content

“முதல்வரின் நடவடிக்கை சனாதன சக்திகளின் சங்கை நெரிப்பதாக உள்ளது” - திருமாவளவன்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

“The action of the chieftain is to discipline the union of Sanatana Shakti” – Thirumavalavan

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதனிடையே ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் மனுவும், அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையினரின் மனுவும் இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை 8 நாட்கள் அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 

இந்நிலையில் கோவையில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்துள்ளார்கள். விசாரிக்கிறோம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கிறோம் என்றெல்லாம் வாதிடுகிறார்கள். ஆனால், அவர்களின் உண்மையான நோக்கம், அவர்களது குறி செந்தில் பாலாஜி அல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அவருக்கு நெருக்கடியைத் தர வேண்டும். அவரை தடுமாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும் அப்போது தான் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் முயற்சியை முறியடிக்க முடியும் என்று மோடி, அமித்ஷா கும்பல் கணக்கு போடுகிறது. 

 

முதலமைச்சர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே இந்தியாவில் எந்த மாநில கட்சித் தலைவரும் சொல்லாத ஒன்றை துணிந்து சொன்னார். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என முதலில் சொன்னவர் மு.க.ஸ்டாலின் தான். இது மோடி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் அரசியலை மோடி, அமித்ஷா ஆகியோர் செய்து வருகின்றனர். அனைத்தையும்விட முக்கியமாக, சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சூழல் கனிந்து வருகிறது.  அதற்கான முதல் அடியை எடுத்து வைத்தவர் அகில இந்திய அளவில் ஸ்டாலின் தான்.  

 

பாஜகவை வீழ்த்துவதும், சனாதன சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும்தான் எங்கள் ஒரே இலக்கு. பாஜகவுடன் முரண்பட்ட, பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் உண்டு. ஆனால் கொள்கை அடிப்படையில் பாஜகவை வீழ்த்துவதே ஒரே இலக்கு என களத்தில் இருப்பது முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதனால் தான் ஆர்.என்.ரவி அவ்வப்போது நெருக்கடியைத் தருகிறார். அரசியல்வாதியைப் போல் செயல்படுகிறார். 

 

அவர்கள் திராவிட அரசியலை வேரறுக்க நினைக்கிறார்கள். பாஜக கோவை மாவட்டத்தில் எளிதாக வளர்ந்துவிடலாம் என நினைத்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் 100 வார்டுகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு வீழ்த்திக் காட்டியவர் செந்தில் பாலாஜி. மேற்கு மாவட்டங்களில் செந்தில் பாலாஜி இருக்கும் வரை அவர்களால் வாலாட்ட முடியாது என்பதை புரிந்துகொண்டுவிட்டார்கள். செந்தில் பாலாஜியை முடக்கினால் தான் மேற்கு மாவட்டங்களில் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கிறார்கள். 

 

நிதிஷ்குமார் இன்று துணிந்து சில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கிறார். எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் கைகோர்க்கும் சூழல் கனிந்துள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாக உள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு கூட்டணியை தமிழ்நாட்டில் வழிநடத்தி வருகிறார். எனவே நான் மறுபடியும் சொல்கிறேன். இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. முதல்வருக்கு வைக்கப்பட்டுள்ள செக். நாம் அனைவரும் முதல்வருக்கு உற்ற துணையாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தத்தான் இங்கு கூடியுள்ளோம். முதலமைச்சர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சனாதன சக்திகளின் சங்கை நெரிப்பதாக உள்ளது. இது திமுகவிற்கு உள்ள நெருக்கடி என்பதை கூட்டணிக் கட்சியில் உள்ள நாங்கள் கண்டும் காணாமலும் இருக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தத்தான் இங்கு வந்திருக்கிறோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்