Skip to main content

‘9 சால் 9 சவால்’; பாஜகவிற்கு காங்கிரஸ் 9 கேள்விகள்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

'9 Sall 9 sawaal'; Congress has 9 questions for BJP

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 9 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் காங்கிரஸ் கட்சி 9 கேள்விகளை (9 சால் 9 சாவால் - 9 ஆண்டுகள் 9 கேள்விகள்) எழுப்பியுள்ளது. 

 

நாட்டில் பணவீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக்கொண்டே செல்வது ஏன்? பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரராவதும் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவது ஏன்? என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து செல்கையில் அரசு நிறுவனங்களை தன் நண்பர்களுக்கு பிரதமர் மோடி விற்பது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

 

பாஜக அரசு  வாக்குறுதி அளித்தபடி இந்திய விவசாயிகளின் வருமானம் 9 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகாதது ஏன்? என்றும் காங்கிரஸ் கேட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை பாஜக அளிக்காதது ஏன்? மக்கள் கடின உழைப்பால் ஈட்டிய சேமிப்பை எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி., போன்றவற்றில் மத்திய அரசு முதலீடு செய்தது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது குறித்து பிரதமர் மோடி இன்னும் வாய் திறக்காதது ஏன் என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 

 

மேலும் சீனாவுக்கு மோடி நற்சான்று அளித்த பிறகும் இந்திய மண்ணை அந்நாடு தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது ஏன்? 18 முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இந்திய பகுதியை சீனா திருப்பி ஒப்படைக்க மறுப்பது ஏன்? தேர்தல் ஆதாயத்துக்காக வேண்டுமென்றே பாஜக வெறுப்பு அரசியலை கடைபிடிப்பது ஏன்? திட்டமிட்டமுறையில் சமூக நீதியின் அடிப்படைகளை பாஜக ஆளும் மாநில அரசுகள் அழிப்பது ஏன்? பெண்கள், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான கொடுமை நடக்கும் போது சாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் அலட்சியப்படுத்துவது ஏன்?  என்றும் காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

அரசியல் சட்ட விழுமியங்களையும் ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு பலவீனப்படுத்துவது ஏன்? எதிர்க்கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை பாஜக கடைபிடிப்பது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பணபலத்தை பயன்படுத்தி சீர்குலைப்பது ஏன்? கொரோனாவால் 40 லட்சம் மக்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களது குடும்பத்துக்கு மோடி அரசு இழப்பீடு தர மறுப்பது ஏன்?  என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.