Skip to main content

8 வழிச் சாலை திட்டம்; முதலமைச்சர் தனது நிலையைத் தெளிவு படுத்த வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

P.R. Pandian


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 


அப்போது அவர், மத்திய அரசு விவசாயிகள் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால நீட்டிப்பு செய்து வட்டித் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கான அரசாணையில் வட்டிக் கணக்கிட உத்திரவிட்டு மோசடி நாடகம் ஆடுகிறது. 

இதனைப் பயன்படுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வட்டியில்லா கடனுக்கு வட்டிக் கணக்கிட்டு கெடுபிடி வசூல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். 

நபார்டு வங்கி 30 ஆயிரம் கோடி கூடுதல் கடன் வழங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகள் நிலுவைக் கடன்கள் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையேல் ஒத்தி வைத்துவிட்டு புதிய கடன் வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும்.
 

 


தஞ்சை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை 2019-20 ஆம் ஆண்டு சாகுபடி செய்த கரும்பைப் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையில் விவசாயிகளுக்கு இது நாள் வரை 1 ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் சென்ற ஆண்டு சாகுபடிக்குப் பெற்ற கடன் திரும்ப செலுத்த முடியாததால் புதிய கடனும் பெற முடியவில்லை. இதனால் மறு உற்பத்தி செய்வதற்கு வழியின்றி விவசாயிகள் பறிதவிக்கின்றனர். உடன் அவர்களுக்கான முழுத் தொகையையும் விடுவிக்க வேண்டும். 

2019 பாராளுமன்ற தேர்தலில் சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் தற்போது மத்திய அரசைத் தூண்டி விட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு திட்டத்தைச் செயல்படுத்த முயற்ச்சிக்கிறாரோ எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் கருப்பண்ணன், கடம்பூர்ராஜூ போன்றவர்கள் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பே்சுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே முதலமைச்சர் போராடும் மக்களை ஏமாற்றுவதைக் கைவிட்டு 8 வழிச்சாலை குறித்து தனது நிலையைத் தெளிவுபடுத்துவதோடு, கரோனா பாதிப்பு காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து அத்திட்டத்தைக் கைவிட வேண்டுகிறேன்.
 

http://onelink.to/nknapp


மேலும் சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் பரிசோதனைகள் கைவிடப்பட்டதாலும் அனைத்துக் கிராமங்களிலும் நோய்த் தொற்று தொடங்கி உள்ளது. இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''எட்டு வழிச்சாலை... நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும்''-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி! 

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

"Eight-lane highway... should be done by acquiring the land"- Minister AV Velu interviewed!

 

'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர் பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது. நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை நாங்களே போட்டிருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

 

சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும். நீங்கள் போகும் வண்டி, நான் போகும் வண்டி என நாளுக்குநாள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்பொழுது என்ன செய்ய முடியும் சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்பொழுது நிலத்தை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறார் சம்பந்தப்பட்ட மந்திரி சாலை போட வேண்டும் என்று சொல்கிறார் என்று எங்கேயாவது நிரூபியுங்கள்'' என்றார்.

 

 

Next Story

'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம்' - மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுக்கும் 8 வழிச்சாலை!  

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. 277 கிலோமீட்டர் தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சேலத்திலிருந்து சென்னை வந்தடையும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே சேலம் பகுதியில் விவசாயிகள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். விவசாயிகளின்  எதிர்ப்பை மீறி பலரின் நிலங்களைச் சாலைக்காக கையகப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டது. மேலும், 8 வழிச்சாலை திட்டம் என்ற பெயரில் மலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வேகமெடுத்துள்ளது இந்த விவகாரம். சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்காக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (16.02.2021) சென்னை வந்தார். இதுதொடர்பாக நேற்று மாலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்துகொண்டார். 'விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் 6 வழிச்சாலை போடப்படும்' எனத் தெரிவித்திருந்தார்.

 

'We will not give even a handful of soil' - 8 lanes to accelerate again after three years

 

இந்நிலையில் சேலம் - சென்னை 6 வழிச்சாலை அமையவுள்ள சேலம், வீரபாண்டி ஒன்றியத்தை ஒட்டியுள்ள பூலாவரி பகுதி மக்கள் 'உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணைக்கூட தர மாட்டோம். 8 வழிச் சாலையானாலும் சரி, 6 வழிச் சாலையானாலும் சரி, எதற்கும் எங்கள் நிலத்தை விட்டுத்தர மாட்டோம்' என்ற முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் சிலர் பேசுகையில், 'முதலில் 8 வழிச்சாலை என்றார்கள், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இன்று 6 வழிச்சாலை என்கிறார்கள், இது ஏமாற்று வேலை. 8 வழிச்சாலை போடத்தான் இவ்வாறு கூறி வருகிறார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி என்பதே சாலைக்காக நிலத்தை அபகரிக்கச் செய்யும் முயற்சி' என்றனர்.