Skip to main content

50 ஆயிரம் ஓட்டுக்கள் நோட்டாவுக்கு - இ.பி.எஸ். பிரச்சாரத்திற்கு பின்னர் ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழு முடிவு

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

ddd

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (30.12.2020) திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மனச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களிடம் பரப்புரை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (31.12.2020) காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகியைத்  தரிசித்து விட்டு பின்னர் ராஜகோபுரம் எதிரே பொது மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு பேசியபோது, ‘ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பல ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்தார். அவை அனைத்தையும் செயல்படுத்தி உள்ளோம்’ என்றார்.

ddd

 

ஸ்ரீரங்கம் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் தமிழக முதல்வர் பேச்சைக் கேட்க வந்தார்கள். ஆனால் அடிமனை பிரச்சனை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது மிகவும் வேதனை அளிப்பதாகக் கூறிய அரங்கமா நல சங்கத்தினர், ‘ஸ்ரீரங்கம் தொகுதியைப் பொறுத்தவரை பத்தாயிரம் குடும்பத்திற்கு மேலாக வாழ்ந்து வருகிறோம், 2011 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிமனை பிரச்சினையைத் தீர்ப்போம் என வாக்குறுதி கொடுத்தார். 

ஆனால் அந்த வாக்குறுதியைக் குறித்து அம்மா வழியில் செயல்பட்டு வருகிறோம் என கூறி வரும் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றரை மாத காலத்திற்குள் அடிமனை பிரச்சினை குறித்து தீர்வு காணாவிட்டால் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க கூடிய நிலை வந்துவிடும். எனவே  இப்பிரச்சினையை விரைந்து தீர்க்க முதல்வர் பரிசீலிக்க வேண்டும்’ என்று ஸ்ரீரங்கம் அடிமைனை உரிமை மீட்புக்குழு அரங்கமா நல சங்கம் சார்பில் கேட்டுக் கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.