Advertisment

''50 அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்பில் இருக்கிறார்கள்... சவாலுக்கு எடப்பாடி தயாரா?''-ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

publive-image

Advertisment

திமுக எம்எல்ஏக்கள் பத்து பேர் தங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில் தங்களிடம் 50 அதிமுக எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டிருப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''50 அதிமுக எம்எல்ஏக்கள் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். அதிமுகவின் 30 மாவட்டச் செயலாளர்கள் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். இரண்டு அதிமுக எம்பிகள் எங்களிடம் தொடர்பில் இருக்கிறார்கள். அவர் அந்த 10 பேருடைய பட்டியலை வெளியிட்டால் நாங்கள் இந்த பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறோம். இதை எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாகவே விடுகிறேன். அதிமுகவில் உள்ள அனைவருமே வந்து திமுகவில் சேர்ந்து எங்களுடன் இணைய வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். காரணம் இதுதான் உண்மையான திராவிட இயக்கம். இதுதான் உண்மையான திராவிட இயக்கத்தினுடைய தாய் கழகம்'' என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe