Skip to main content

இந்தியாவில் 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள்; தமிழ்நாடு முதல்வர்?

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

29 out of 30 chief ministers in India are crorepatis; Except one...

 

நாட்டில் உள்ள 30 மாநிலங்களில் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவரின் கீழ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள 30 மாநில முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனத் தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த அமைப்பு தேர்தலின் போது தற்போதைய முதலமைச்சர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்பட்டியலில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார். இவரிடம் ரூ.510 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.

 

இரண்டாம் இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் பெமாகாண்டு உள்ளார். இவருக்கு ரூ.163 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன்பட்நாயக் ரூ.63 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 14 ஆவது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 8.88 கோடி எனத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவரைத் தாக்கிய மகள்.... மன்னிப்புக் கேட்ட முதலமைச்சர்

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

 

The daughter who the doctor... Chief Minister apologized!

 

சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமைத் தர மறுத்த மருத்துவரைத் தாக்கிய மகளின் செயலுக்கு மிசோரம் மாநில முதலமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார். 

 

மிசோரம் மாநில முதலமைச்சர் ஸ்சோரம்தங்காவின் மகள் மிளரி, மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் உள்ள மருத்துவமனைக்கு முன்பதிவு இல்லாமல் சென்ற அவர், மருத்துவரைச் சந்திக்க முயன்றுள்ளார். முன்பதிவு செய்து நேரம் பெற்று ஆலோசனை பெற வருமாறு, மருத்துவர் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மிளரி, மருத்துவரையும், மருத்துவமனையும் ஆவேசமாகத் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிச் சர்ச்சையாகியுள்ளது. 

 

தனது மகளின் செயலுக்காக முதலமைச்சரிடம் ஸ்சோரம்தங்கா, பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

Next Story

டோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! 

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Chief Minister M.K.Stal's congratulations to ms dhoni

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது 41வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மகேந்திர சிங் டோனி கேக் வெட்டினார். டோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எம்.எஸ்.டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய பின்னணியில் இருந்து வரும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.