cbsc

Advertisment

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:

’’சிபிஎஸ்சி வினாத்தாள் வெளியாகி இருப்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்விமுறையின் தோல்விக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. மறுதேர்வு என்பது 28 இலட்சம் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாமல், தேசிய கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தகர்ப்பதாகும். இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

Advertisment