Skip to main content

2021 சட்டமன்றத் தேர்தல்: கூட்டணி விவரங்கள்!

Published on 16/03/2021 | Edited on 03/04/2021

 

2021 TamilNadu assembly election full detail

 

தமிழகத்திற்கான 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடைகிறது. தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் மீது மார்ச் 20ஆம் தேதி பரிசீலனை நடைபெறுவதோடு, வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 22 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே. 2ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.  

 

இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி எந்தக் கட்சிகளுடன் கூட்டணி. யார் தலைமையில் கூட்டணி. எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன எனும் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. 

 

திமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 

 

2021 TamilNadu assembly election full detail

 

திமுக  173
காங்கிரஸ் 25 
சி.பி.ஐ 6
சி.பி.எம். 6
விசிக 6
மதிமுக 6
கொ.ம.தே.க. 3
இ.யூ.மு.லீக். 3
ம.ம.க 2
ஃபார்வார்ட் பிளாக் 1 
தமிழக வாழ்வு உரிமை 1 
மக்கள் விடுதலை கட்சி 1 
ஆதித்தமிழர் பேரவை  1


அதிமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி

 

2021 TamilNadu assembly election full detail


அதிமுக  179
பாட்டாளி மக்கள் கட்சி 23 
பாரதிய ஜனதா கட்சி 20
தமிழ் மாநில காங்கிரசு 6
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1
புரட்சி பாரதம் 1
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1
மூவேந்தர் முன்னணிக் கழகம் 1
பசும்பொன் தேசிய கழகம் 1


மநீம தலைமை: முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்

 

2021 TamilNadu assembly election full detail

 

மநீம 144
ஐ.ஜே.க 40
சமக 37
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி 10
தமிழ்நாடு இளைஞர் கட்சி 3


அமமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்

 

2021 TamilNadu assembly election full detail

 

அமமுக 161
தேமுதிக 60
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 3
கோகுல மக்கள் கட்சி 1 
மருது சேனை சங்கம் 1 
விடுதலை தமிழ் புலிகள் கட்சி 1 
மக்கள் அரசு கட்சி 1 
 

நாம் தமிழர்: முதல்வர் வேட்பாளர் சீமான்

 

2021 TamilNadu assembly election full detail

 

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி

 

 

திமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்   

 

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

 

சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர்கள் பட்டியல்!

 

திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் பட்டியல்

 

விசிக வேட்பாளர் பட்டியல் 

 

திமுக கூட்டணியில் இதர கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

 

அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்

 

பாமக வேட்பாளர்கள் பட்டியல்


 பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

 

த.மா.கா. மற்றும் இதர கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

 


அமமுக வேட்பாளர் பட்டியல் 


தேமுதிக வேட்பாளர் பட்டியல்
 

 

 

மநீம வேட்பாளர்கள் பட்டியல்

 


நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல்

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது