Skip to main content

'மீண்டும் பேசுபொருளான 1989 சட்டப்பேரவை சம்பவம்'-தமிழிசை, திருச்சி சிவா, இபிஎஸ் கருத்து 

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

'1989 Legislative Assembly Incident Revisited'-Tamilisai, Trichy Siva Comment

 

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பதிலளித்து பேசுகையில் தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஜெயலலிதா மானபங்கம் படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதாக ஆவேசமாக பேசியிருந்தார். இது தொடர்பான பேச்சுக்கள் தமிழக அரசியலில் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

 

'1989 Legislative Assembly Incident Revisited'-Tamilisai, Trichy Siva Comment

 

இந்நிலையில் 1989-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேச முயற்சித்தபோது இந்த கொடூரமான தாக்குதல் அன்றைய முதலமைச்சர் கலைஞர் முன்னிலையில் நடந்தது. அன்றைய அமைச்சர்கள், திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினர். அப்பொழுது திருநாவுக்கரசுவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ம் அதை தடுத்தார்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். தடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே இப்பொழுது இருக்கின்ற ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்க, சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் தலை முடியை பிடித்து இழுக்க, மிகப்பெரிய கோரமான காட்சி சட்டமன்றத்தில் அரங்கேறியது. அன்றைய தினம் ஒரு கருப்பு நாள் என்று சொல்லலாம். 1989 மார்ச் 25ஆம் தேதி ஒரு கருப்பு நாளாக தான் இன்றும் பார்க்கப்படுகிறது. இன்றும் என் மனதிலே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் நான் சட்டமன்றத்தில் இருந்ததால் சொல்கிறேன். இதுபோன்ற கொடுமையான நிகழ்வு சட்டமன்ற வரலாற்றில் இதுவரை நடைபெற்றது அல்ல'' என்றார்.

 

'1989 Legislative Assembly Incident Revisited'-Tamilisai, Trichy Siva Comment

 

அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில், ''ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டபோது அவருடைய ஆடைகள் எல்லாம் கிழிக்கப்பட்டு, அவர் மீது கனமான பொருட்கள் எல்லாம் எறியப்பட்டு ஒரு பெண் என்றும் பாராமல் துன்பப்படுத்தப்பட்டு சட்டமன்றத்தை விட்டு வெளியே வந்தார் என்பது வரலாறு. ஆனால் அப்படிப்பட்ட ஒன்று நடக்கவே இல்லை என்று தமிழக முதல்வர் சொல்கிறார். அவர்தான் அப்படி சொல்கிறார் என்றால் திருநாவுக்கரசு, அதிமுகவில் இருந்தவர் தான். எங்களுடனும் இருந்தவர்தான். அவரும் இப்படி செல்கிறார். பதவிக்காக கட்சிதான் மாறினார் என்று இல்லாமல், இன்று பதவிக்காக சாட்சியத்தையே மாற்றி இருக்கிறார் என்பதுதான் கவலையை கொடுக்கிறது. நடந்தது நடந்தது தான். இதை மறைப்பதனால் எந்த பலனும் இல்லை'' என்றார்.

 

'1989 Legislative Assembly Incident Revisited'-Tamilisai, Trichy Siva Comment

 

இதேபோல் திமுக எம்பி திருச்சி சிவா இதுகுறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''அன்றைக்கு ஜெயலலிதா பக்கத்தில் இருந்தவர் இன்றைய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு. இதைப்பற்றி அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். அவர் சொன்னால் பொருள் இருக்கிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்-இடம் போய் கேளுங்கள். எடப்பாடி பழனிசாமி சொல்வதில் என்ன இருக்கிறது? 1989க்கெல்லாம் செல்ல வேண்டாம் ஜெயலலிதா மருத்துவமனைக்கு போகும் வரை இப்படி ஒருவர் (எடப்பாடி பழனிசாமி) இருப்பதே தெரியாது. கேபினட் அமைச்சர்கள் புகைப்படங்களை பாருங்கள் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இருப்பார். ஆனால் அவர் எல்லாம் தெரிந்தது போல பேசிக் கொண்டிருக்கிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்; ஒரு கட்சியின் பொறுப்பில் இருக்கிறார் என்கின்ற போது பொறுப்போடு பேசட்டும். இதெல்லாம் நடந்ததை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் பேசக்கூடாது. பக்கத்தில் இருந்த திருநாவுக்கரசு என சொல்லி இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் கேளுங்கள். அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு தான் தெரியும். கலைஞரின் கண்ணாடி உடைக்கப்பட்டது; அவர் கீழே தள்ளப்பட்டுள்ளது எல்லாம். அன்றே நாங்கள் பேசி முடித்து விட்டோம். இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பேசுகிறார்கள். நடந்ததை பற்றி எல்லா விளக்கங்களையும் ஏற்கனவே தந்தாகிவிட்டது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.