Advertisment

1971ல் வெளிவந்த துக்ளக் இதழ் இதுதான்? பரபரப்பை ஏற்படுத்திய இதழின் பக்கம்... பிரச்சனை முடியுமா?

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார்.

Advertisment

tuklak

இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களை காண்பித்து தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.

இந்த நிலையில் தற்போது 1971 ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளிவந்துள்ளது. இந்த பத்திரிகையில் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் ராமர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டதோடு ஒரு புகைப்படமும் அந்த கட்டுரையில் உள்ளது. மேலும் இது போன்ற ஊர்வலத்தை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடத்த அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் திமுக ஆட்சி இந்த ஊர்வலத்தை அனுமதித்துள்ளது என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Special news politics Speech rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe