காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்ட 135 ஆவது ஆண்டு விழாவை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பேரணிகள் மற்றும் பொது கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் தமிழக காங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் கொடிகளைப் பிடித்தவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.