Advertisment

‘ரூ.4.82 லட்சம் போதை மாத்திரைகளுடன் 4 பேரைக் கைது செய்துள்ளோம்’ - எஸ்.பி பேட்டி

pills

புதுக்கோட்டையில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அட்டைப் பெட்டிகளில் போதை மாத்திரைகளுடன் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா செய்தியாளர்களிடம் பேசும் போது, “4.82 லட்சம் மாத்திரைகளுடன் 4 பேரை புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ.9 கோடி. இந்த மாத்திரைகளில் தயாரிப்பு நிறுவனப் பெயரோ, சீலோ இல்லை. இவை எங்கிருந்தோ தயாரித்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது.

Advertisment

pil

இந்த மாத்திரைகள் என்ன வகையானது என்பதை அறிய சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளோம். மேலும், எங்கே தயாரிக்கப்பட்டு எப்படி புதுக்கோட்டை வந்தது. இதில் வேறு யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கடத்தலை பிடித்த அனைவரையும் பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

police pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe