மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி ஆவார். மதுரையில் பழிக்குப் பழியாகக் கடந்த 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்துள்ளன. இதில் வெள்ளைக்காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதன் காரணமாக வெள்ளைக்காளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ரவுடி வெள்ளைக்காளி ஆஜர்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு கார்களில் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று போலீசார் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து, பாண்டி ஆகியோர் காயமடைந்தனர். இதனையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் போலீஸ் வாகனத்தில் இருந்த ரவுடி வெள்ளைக் காளிக்கு நல்வாய்ப்பாகக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும், அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் போலீசார் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு போலீஸ் எஸ்.ஐ. ராமச்சந்திரன் என்பவர் தனது துப்பாக்கியால் சுட்ட போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டத்தில் காவலர்கள் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/24/per-police-van-incident-2026-01-24-22-22-02.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மண்டல போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளைக்காளி என்ற குற்றவாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அதில் ஏற்கனவே இன்டெலிஜென்ஸ் இருந்ததனால் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்காக இருந்தார்கள். இடையில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பின்னால் தொடர்ந்து இரண்டு வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளக்காளியை கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது பாதுகாப்பிற்காக இருந்த போலீஸ் உடனடியாக இதைத் தடுக்கக்கூடிய விதமாக, குற்றவாளிக்கு எதுவும் ஆகாமல் தடுத்துவிட்டார்கள்.
போலீஸ் எஸ்கார்டு எஸ்.ஐ. உடனடியாக துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கிச் சுடும்போது அவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம் அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் வந்த இரண்டு கார்களில் ஒரு கார் கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.
Follow Us