செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “2026ஆம் ஆண்டில் நான் தமிழ்நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் வித்தியாசமான மகிழ்ச்சியில் இருக்கும் நேரம் இது. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சி நாயகன் பாரத ரத்னா எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.
இன்று இந்த மேடையில் இருந்து, உங்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் நான் வாழ்த்துகிறேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளும் இந்த நாளே. இந்த நாளை நாடு பராக்கிரம திவாஸ் என்று கொண்டாடுகிறது. தமிழ்நாட்டின் பல துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் நேதாஜியுடன் சுதந்திரப் போரில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரின் இதயத்திலும் வீரமும் தேசபக்தியும் வேரூன்றியுள்ளன. இந்தப் புனித பூமியிலிருந்து நேதாஜிக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். இந்தப் பரந்த மக்கள் கடல் தமிழ்நாடு முழுவதும், நாடு முழுவதும் ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது. தமிழ்நாடு இப்போது மாற்றத்திற்குத் தயாராக உள்ளது என்பதே செய்தி.
திமுகவின் தவறான நிர்வாகத்திலிருந்து தமிழகம் இப்போது விடுதலையை தேடுகிறது. தமிழகம் இப்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விரும்புகிறது. திமுக அரசிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டை வளர்ந்த, பாதுகாப்பான மற்றும் ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். திமுக அரசு வெளியேறுவதற்கான கவுண்ட்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. நீங்கள் (பொதுமக்கள்) திமுகவுக்கு இரண்டு முறை முழு பெரும்பான்மையை வழங்கினீர்கள். ஆனால் அவர்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/23/arivalayam-mks-2026-01-23-17-44-05.jpg)
திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அதற்காக எந்த வேலையும் செய்யவில்லை. மக்கள் இப்போது திமுக அரசாங்கத்தை சி.எம்.சி. அரசாங்கம் என்று அழைக்கிறார்கள். சி.எம்.சி. அரசாங்கம் என்பது 'ஊழல், மாஃபியா மற்றும் குற்றத்தை' ஊக்குவிக்கும் அரசாங்கம் என்பது பொருளாகும். தமிழக மக்கள் இப்போது திமுக மற்றும் சி.எம்.சி. (C: Corruption, M: Mafia, C: Crime) இரண்டையும் வேரோடு பிடுங்க முடிவு செய்துவிட்டனர். இங்கே, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை எஞ்சின் அரசாங்கம் ஆட்சிக்கு வருவது உறுதி” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/23/nda-meeting-modi-2026-01-23-17-43-05.jpg)