மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் 28 ஆம் ஆண்டு பாரதி விழா நிகழ்வில் தொல்லியல் அறிஞர் முனைவர் கா.ராஜன் அவர்களுக்கு ₹50,000 பொற்கிழியுடன் கூடிய ' பாரதி விருது ' மற்றும் தகுதிப் பட்டயம் வழங்கப்பட்டது. விருதினை தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு அவர்கள் வழங்கினார். மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி
உடன் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி ஐஏஎஸ், தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன், ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இ.மான்விழி மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/11/a5795-2025-12-11-21-41-25.jpg)