Advertisment

“முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தது ஏன்?” - ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி!

ops-mks-meet-pm

கோப்புப்படம்

2026 - 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 17ஆம் தேதி (17.02.2026) காலை 09:30 மணிக்குக் கூடியது. அப்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் (18.02.2026) தொடங்கியது. அந்த வகையில் நேற்றும், நேற்று முன்தினமும் என இரு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இத்தகைய சூழலில் தான் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் இன்று (20.02.2026) பதிலளித்துப் பேசினார்கள். இருப்பினும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர். அதே சமயம் அவை நடவடிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முழுமையாக பங்கேற்றார்.

Advertisment

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து சந்தித்து பேசியுள்ளார். அதாவது சட்டபேரவையில் அமைச்சர்களின் பதிலுரை முடிவடைந்த பிறகு முதல்வர் அவைக்குள் வரும் போது அவரை பார்ப்பதற்கு வாயில் அருகே ஓ. பன்னீர்செல்வம் காத்திருந்து முதலல்வர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் அறையில் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ops-mks-meet1
கோப்புப்படம்

மற்றொருபுறம் ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டப்பேரையில் பேசுகையில், “நாங்கள் எப்பொழுது கைதூக்கினாலும் உடனே எங்களுக்குப் பேசுகின்ற வாய்ப்பை வழங்கிய பேரவைத் தலைவருக்கு எனது தொகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டு வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக (நமது மாண்புமிகு தலைவர்) மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேண்டும் என்று, எம்ஜிஆர் ஆசியோடும், ஜெயலலிதா ஆசியோடும் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் அவர்களை வாழ்த்தி (எங்கள் அண்ணன்) ஓ.பி.எஸ். அவர்களின் வாழ்த்துக்களோடு நான் நன்றி கூறி எனது தொகுதி மக்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளிதார். அதில், “திமுகவின் ஆட்சி சிறப்பாக இன்று நிறைவு பெற்றதன் காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன். எம்.எல்.ஏ. ஐயப்பனின் செயல், எண்ணம் என்பது தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை  இன்றைக்கு சொல்லியிருக்கிறார். பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலை, கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியின் நிலை, தமிழகத்திற்கு செய்த சாதனைகள் எல்லாம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு உள்ளது” எனத் தெரிவித்தார். 

budget session mk stalin O Panneerselvam tn assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe