One losre their live in clash over cannabis smoking - local bomb thrown Photograph: (thiruvallur)
திருவள்ளூரில் கஞ்சா புகைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் வெடிகுண்டு வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதி அருகே இரவு நேரத்தில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகிய மூன்று இளைஞர்கள் நின்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று பேர் மீதும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.