Advertisment

இரண்டாவது முறையாக முன்ஜாமீன் கோரிய என்.ஆனந்த்

a5481

N. Anand seeks anticipatory bail for the second time Photograph: (tvk)

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் வரும் 17 ஆம் தேதி  விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

இந்நிலையில் முன்ஜாமீன் கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஐகோர்ட் கிளையில் இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானது அக்டோபர் 13 அல்லது 14-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

highcourt madurai tvk vijay karur stampede
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe