கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. இதனை ஏற்று, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று (12.01.2026) காலை டெல்லிக்குச் சென்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை 04.15 மணியளவில் நிறைவடைந்தது. இந்த விசாரணையின் போது விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள், “பிரச்சார கூட்டத்திற்குத் தாமதமாக வந்தது ஏன்?.
கட்சி தொண்டர்களின் பாதுகாப்பு, அவசரக் கால மேலாண்மைக்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள் செய்யப்படவில்லையா?. அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்து விழுந்தபோது நீங்கள் ஏன் பேச்சை நிறுத்தவில்லை?” எனச் சரமாரியாகச் சுமார் 100 கேள்விகள் வரை எழுப்பியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதோடு இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக சிபிஐ தரப்பில் இருந்து பதிலைப் பெற்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சிபிஐ விசாரணை முடிந்து மாலை 06.30 மணியளவில் அங்கிருந்து விஜய் காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சிபிஐ அதிகாரிகள் இன்று (13.01.2026) மீண்டும் விசாரணைக்கு வருமாறு கோரினர். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சிபிஐ, விசாரணை தற்காலிகமாக ஒத்திவைத்தது. அதே சமயம் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மற்றொரு தேதியில் விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இன்றும் (13.01.2025) சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/13/tvk-eye-sign-2026-01-13-19-19-02.jpg)
இதனையடுத்து, விஜய்யிடம் இன்று விசாரணை நடைபெறவில்லை என்றும், இதற்கான மறு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் சிபிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த விசாரணைக்கு நடுவே சிறிது நேரம் விஜய்க்கு மதிய உணவு அருந்தக் கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர் இன்று சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் ஜனவரி 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/tvk-vijay-sad-1-2026-01-13-19-17-29.jpg)