Advertisment

மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த துரை வைகோ எம்.பி!

!

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான வேலையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் மாநாட்டு திடலில் மாநாடு மேடை, வாகன ஒருங்கிணைப்பு, குடிநீர் கழிப்பிட வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து மாநாடு ஒருங்கிணைப்பு குழுவினரிடம் வேலைகளை விரைவுபடுத்தச் சொல்லிச் சென்றார்.இந்நிகழ்வின் போது மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா ஆகியோர் உடன் இருந்தனர்.

 

mdmk vaiko durai vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe