தனது மகளிடம் தவறான முறையில் நடந்து கொண்ட நபரை தாய் காலணியால் அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அந்த வீடியோவில், ஒரு நபரை, பெண்ணின் தாயார் தனது காலணியை எடுத்து சரமாரியாக அடித்து தாக்குகிறார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள மாட்லி பந்தர்கோட் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்கையில் அந்த நபர் உள்ளூர் பஞ்சர் கடையில் வேலை பார்ப்பதாகவும், பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டதால் பெண்ணின் தாயார் காலணியை எடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து இந்து அமைப்பைச் சேர்ந்த சச்சேந்திர பர்மர் கூறுகையில், ‘இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞன் தலைமறைவாகிவிட்டான், அவன் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவன் பிடிபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். உத்தரகாஷியிலிருந்து பல வீடியோக்கள் சமீபத்தில் வைரலாகிவிட்டன, அவற்றில் லவ் ஜிஹாத் தொடர்பான உள்ளடக்கம். ஒரு ஆண் ஒரு பெண்ணின் ஆபாச வீடியோவைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் முந்தைய சம்பவம் ஆகியவை அடங்கும் என்று கூறினார்.