Advertisment

“55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல்!

trb-raja-mic

55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “தமிழ்நாட்டில் கப்பல் கட்டும் தொழிலுக்கு மிகப்பெரிய செய்திகள்” எனக் குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டி.என். ரைசிங் (TN Rising) – தூத்துக்குடி மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரத்யேக நிறுவனத்தை அறிவித்தார். 

Advertisment

இந்த மாத தொடக்கத்தில், வரவிருக்கும் முதல் தமிழ்நாடு கடல்சார் போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025 இன் பின்னணியில், மாநிலத்தில் கப்பல் கட்டுமானத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக ஒரு சிறப்பு நோக்க வாகனத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிப்காட் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் இடையே கையெழுத்திட்டன. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இரண்டு உலகத் தரம் வாய்ந்த பசுமைக் கள வணிகக் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்காக கப்பல் கட்டும் துறையில் இரண்டு அல்ட்ரா மெகா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று, கையெழுத்தானதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 30 ஆயிரம்  கோடி முதலீடு செய்யப்பட்டு 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ. 15 ஆயிரம் கோடியை முதலீடு செய்யும். இதன் மூலம் முதல் கட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும். மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட், ரூ. 15 ஆயிரம் கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கும். இது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். கடல்சார் துறையை மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற விழாவில் கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வைக் குறிக்கின்றன. இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுப்பதைக் குறிக்கின்றன. பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தத் துறையில் நிலைத்தன்மைக்கு முன்னோடியில்லாத வாய்ப்புகளைத் திறக்கின்றன”எனத் தெரிவித்துள்ளார்.

sipcot tn govt ship trb rajaa port Tuticorin employment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe