Advertisment

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் துரைமுருகன்!

durai-mks-udhay

கோப்புப்படம்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். 

Advertisment

குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் 20-01-2026 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கில்” நடைபெறும். அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்திற்கான பொருள்: 2026 சட்டப்பேரவைத் தேர்தல்” எனத் தெரிவித்துள்ளார்.

:Durai Murugan anna arivalayam District Secretaries Meeting mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe