Advertisment

நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

a4486

Mettur Dam filled for the fourth time this year Photograph: (METTUR DAM)

அண்மையாகவே கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்திற்கு  திறந்து விடப்படும் நீரின் அளவானது அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisment

கடந்த 20/07/2025 அன்று நடப்பாண்டிலேயே மூன்றாவது முறையாக மேட்டூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.  20/07/2025  நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியிலிருந்து 31 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது .

இந்நிலையில் இன்று (23/07/2025) தற்போது மேட்டூர் அணை நான்காவது முறையாக நிரம்பியுள்ளது.16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் முழுவதுமாக நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக மேட்டூர் அணை நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

water source create Salem Mettur Dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe