மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான வேலையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி ஆகியோர் தலைமையில் கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மாநாட்டிற்கான கொள்கை முழக்கத்துடன் கூடிய டீசர்ட் வெளியிடப்பட்டது. டீசர்ட்டை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிமுகம் செய்து வைத்தார். இந்த டீசர்ட் தொண்டர் அணியினர் பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.