பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே சமயம், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது.
பீகாரில் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களையும் தாண்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றியிருந்ததும், குறைவான இடங்களை மட்டுமே பிடித்து தேர்தலில் படுதோல்வி அடைந்ததும் எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹினி ஆச்சாரியா நேற்று அரசியலில் இருந்து குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் அரசியலை விட்டு விலகுகிறேன், என் குடும்பத்தையே துறக்கிறேன். சஞ்சய் யாதவும், ரமீஸ்வும் என்னிடம் இதைச் செய்யச் சொன்னார்கள். எல்லாப் பழிகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். தேஜஸ்வி யாதவின் நெருங்கிய நண்பரும், கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் யாதவ், தன்னை அரசியலில் இருந்து விலகுமாறு தேஜஸ்வி யாதவின் சகோதரி ரோஹினி தெரிவித்துள்ளது பீகார் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனது குடும்பத்தினர் மீது ரோஹினி ஆச்சார்யா சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று, ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமானப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் மீது மோசமான வார்த்தைகளால் திட்டப்பட்டனர், அவர்களை அடிக்க ஒரு செருப்பு தூக்கப்பட்டது. நான் என் சுயமரியாதையை சமரசம் செய்து கொள்ளவில்லை, நான் உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை, அதனால்தான், இந்த அவமானத்தை நான் தாங்க வேண்டியிருந்தது. நேற்று ஒரு மகள், கட்டாயத்தின் பேரில், அழுதுகொண்டிருந்த பெற்றோரையும் சகோதரிகளையும் விட்டுவிட்டு வந்தாள். அவர்கள் என்னை என் தாய் வீட்டிலிருந்து பிரித்துவிட்டார்கள். அவர்கள் என்னை அனாதையாக விட்டுவிட்டார்கள். உங்களில் யாரும் என் பாதையில் நடக்கக்கூடாது, எந்த குடும்பத்திற்கும் ரோகிணி போன்ற மகள், சகோதரி இருக்கக்கூடாது.
நேற்று, நான் அழுக்காக இருக்கிறேன் என்றும், என் அப்பாவிடம் என் அழுக்கு சிறுநீரகத்தை அவருக்கு பொருத்தச் சொல்லி, கோடிக்கணக்கான ரூபாய் வாங்கி, ஒரு சீட்டை வாங்கி, பின்னர் அந்த அழுக்கு சிறுநீரகத்தை உள்ளே வைத்தேன் என்றும் சபித்தார்கள். உங்கள் தாய்வழி வீட்டில் ஒரு மகன் அல்லது சகோதரர் இருக்கும்போது, ​​உங்கள் கடவுள் போன்ற தந்தையை ஒருபோதும் காப்பாற்ற வேண்டாம் என்று திருமணமான அனைத்து மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு பதிலாக, அந்த வீட்டின் மகனான உங்கள் சகோதரனிடம், அவரது சொந்த சிறுநீரகத்தையோ அல்லது அவரது ஹரியான்வி நண்பர்களில் ஒருவரின் சிறுநீரகத்தையோ மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லுங்கள்.
அனைத்து சகோதரிகளும் மகள்களும் தங்கள் சொந்த வீடுகளையும் குடும்பங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும், தங்கள் குழந்தைகளையும் மாமியார் வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டும், பெற்றோரை கவனிக்காமல், தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். என் குடும்பத்தையும், என் மூன்று குழந்தைகளையும் கவனிக்காமல், என் கணவரிடமோ அல்லது என் மாமியாரிடமோ சிறுநீரக தானம் செய்யும்போது அனுமதி பெறாமல் இருப்பது எனக்கு மிகப்பெரிய பாவமாகிவிட்டது. என் கடவுளை, என் தந்தையைக் காப்பாற்ற நான் செய்ததை நான் செய்தேன், இன்று அது அழுக்கு என்று அழைக்கப்படுகிறேன். உங்களில் யாரும் என்னைப் போல ஒரு தவறு செய்யக்கூடாது, எந்த குடும்பத்திற்கும் ரோகிணி போன்ற ஒரு மகள் இருக்கக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/16/rohinii-2025-11-16-17-20-28.jpg)