Advertisment

செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு; தேர்தல் வேலையைத் தொடங்கிய கமல்ஹாசன்!

mnm

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும், மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் தலைமையில் இன்று (24-01-26) நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது என ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த கூட்டத்தில் 16 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (24-01-26) முதல் ரூ.50,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பணிகளை செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார். 

Kamal Haasan Makkal needhi maiam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe