தில்லியை சேர்ந்த ராகுல் என்பவர் சொமேட்டோ உணவு டெலிவரி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை பதிவு செய்து கொண்ட அந்நிறுவனம் விரைவில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று ராகுலின் தொலைப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அந்த குறுந்தகவலை பார்த்த அவரின் 5 வயது மகன், தனக்கு பொம்மை கார், மற்றும் பலூன் வேண்டும் என அந்த குறுந்தகவலுக்கு பதில் தகவல் அனுப்பியுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதை பார்த்த ராகுல் தனது மகன் சொமேட்டொவிற்கு அனுப்பிய குறுந்தகவலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், 'எனது 4 வயது மகன், நான் சொமேட்டோவில் ஆர்டர் செய்வதை பார்த்து, இவர்கள் எதை கேட்டாலும் தருவார்கள் என நினைத்து கார் பொம்மையும், பலூனும் கேட்டுள்ளான்" என தெரிவித்துள்ளார். அந்த பதிவை பலரும், சொமோட்டோ நிறுவனத்தை டேக் செய்து பகிர்ந்தனர். இவ்வாறு பலரும் பகிர்ந்ததால் இந்த பதிவு சொமேட்டோ நிறுவனத்தின் பார்வைக்கு வந்தது. அதை தொடர்ந்து சொமேட்டோ நிறுவனம், ஆச்சரியப்படுத்தும் விதமாக அந்த சிறுவனுக்கு, பொம்மை கார் ஒன்றை அன்பு பரிசாக வழங்கியுள்ளது.