மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திர உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது.
தற்போதைய நிலைப்படி முதல்வரான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 146 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் தெலுங்கு தேசம் கட்சி 25 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. எனவே ஆந்திராவில் ஆட்சி மற்றம் ஏற்படும் என கணிக்கப்படுகிறது.