Skip to main content

முன்னாள் அமைச்சர் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி மர்ம மரணம்...! பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்...!

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரரும் முன்னாள் அமைச்சருமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். 

 

ys vivekananda reddy

 

கடப்பாவில் உள்ள அவர் வீட்டில் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி தனியாக இருந்துள்ளார். நேற்று காலை பணியாட்கள் வேலைக்காக வந்தபோது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டின் குளியல் அறையில் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி இறந்து கிடந்தார். அவரது உடலில் தலை மற்றும் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது எனவும் காவல்துறை தெரிவித்தனர்.
 


இந்தத் தகவலறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது தாய் விஜயம்மா ஆகியோர் விவேகானந்த ரெட்டியின் வீட்டுக்கு விரைந்தனர். அதன் பின் காவல்துறை அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் கத்தியால் குத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான காயங்களும் உடலில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரேதப் பரிசோதனையின் முதல் கட்ட தகவலின்படி ஒய்.எஸ் விவேகனந்தா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அவரது உடலில் 7 காயங்கள் காணப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விவேகானந்த ரெட்டி உயிரிழந்திருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.

 

 

 

சார்ந்த செய்திகள்