Skip to main content

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் அடித்து கொலை? போலீசார் தீவிர விசாரணை!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Youth passed away in pondicherry police investigation

 

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இதையொட்டி நெல் உள்ளிட்ட விளைபொருள் மூட்டைகளை வைப்பதற்காக இரண்டு கிடங்குகள் உள்ளன. இதில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடோனுக்கு இடது புறம் உள்ள பகுதியில் நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த சடலத்தை பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் உடனடியாக கோரிமேடு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

 

தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவரது உடம்பில் ஆங்காங்கே இரத்தக்கறை தழும்புகள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கோரிமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட சில ரவுடிகளையும், பொதுமக்கள் சிலரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 

Youth passed away in pondicherry police investigation

 

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, 2 தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இறந்து கிடந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரின் மகன் திப்புசுல்தான்(29) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில் சிலருடன் அவருக்கு பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததும், சுமார் 40 லட்சம் வரை பலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. 


இதனால் கடன்காரர்கள் அவரை அவ்வப்போது அழைத்து சென்று பணத்தை கேட்டு மிரட்டி தாக்குவது வழக்கமாக இருந்துள்ளது. இதன் எதிரொலியாக அவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று அடித்து கொலை செய்து பிணத்தை புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்றும், மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவரை விட்டு தற்போது தனியாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்றும் பல்வேறு கோணங்களில்  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.