congress protest

வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் டிராக்டரை தீயிட்டுக் கொளுத்தினர்.

Advertisment

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இம்மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து போராட்டம் வலுத்துள்ளது.

Advertisment

சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு டிராக்டரை தீயிட்டுக் கொளுத்தினர். இது தொடர்பாக பஞ்சாப்பைச் சேர்ந்த 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.