Skip to main content

பீச், பார்க், சினிமா எதுவும் இல்ல; நெகிழ வைக்கும் இளைஞர்களின் காதலர் தின கொண்டாட்டம்...

Published on 14/02/2019 | Edited on 14/02/2019

 

hgjghjghj

 

காதலர் தினமான இன்று அஹமதாபாத் நகரில் ஒரு இளைஞர்கள் குழு வித்தியாசமான முறையில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளது. காதலர் தினமான இன்று குழுவாக கூடிய இளைஞர்கள் அங்குள்ள ஒரு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். அங்குள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு இனிப்புகள், உணவு வழங்கி பிறகு நடனமாடி கொண்டாடியுள்ளனர்.

இது குறித்து இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான ஒரு இளைஞர் கூறும்போது, 'நாம் அனைவருக்கு தாய் தந்தை தான் முதல் காதல், அதன் பிறகுதான் அனைத்தும், எனவே இந்த தினத்தில் அவர்களை கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை. எனவே தான் இங்கு காதலர் தினத்தை கொண்டாடுகிறோம். இது அவர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. வெளித்தோற்றத்தில் நாம் மேற்கத்தியர்களாக மாறிவந்தாலும் நமது மனம் இந்தியர்களாவே இருப்பது தான் சிறந்தது' என கூறினார்.

மேலும் இது தங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள் என அந்த இல்லத்தில் வாழும் முதியவர்களும் கண்ணீர் மல்க தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

'ஜாம்நகருக்கு கிடைத்த அங்கீகாரம் மதுரைக்கும் கிடைக்குமா?'-ஆனந்த் அம்பானி திருமண விழாவால் சர்ச்சை

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
nn

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் குஜராத்தில் களைகட்டியுள்ளது. ஜாம்நகரில் இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்ட நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். உலகப்புகழ் பெற்ற ரிஹானாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சிறுவயதில் இருந்தே பாட்டி செல்லமான ஆனந்த் அம்பானி அவர் திருமணத்தை பிறந்த ஊரான ஜாம்நகரில் வைக்க வேண்டும் என்ற சென்டிமெண்டால் அங்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது அப்பா பிறந்த ஊர். சிறுவயதில் இங்கு வளர்ந்ததால் திருமணத்தை இங்கு நடத்த தீர்மானித்துள்ளோம் என ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்கள் அங்கு வர இருப்பதால், ஒரு திருமண நிகழ்விற்காகவே ஜாம்நகர் விமான நிலையத்திற்கு திடீர் சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

nn

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளார். '10 நாள் திருமண கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மதுரை விமான நிலையத்திற்கு மட்டும் சர்வதேச அங்கீகாரம் வழங்காமல் மத்திய அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?' என எக்ஸ் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.