Skip to main content

'நடு மண்டையை மொட்டையடித்து... அதற்கு தோதாக விக் வைத்து...' 50 லட்ச ரூபாய் நகையை கடத்திய இளைஞர்!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019


கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசிக் என்பவர் ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கொச்சி வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரின் நடவடிக்கையை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் தலையில் அணிந்திருந்த விக்கிற்கு அடியில் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

dafg



இதற்காக ஆசிக் தலையின் ஒரு பகுதியில் உள்ள முடியை மட்டும் நீக்கிவிட்டு அந்த இடத்தில் கடத்தவேண்டிய தங்கத்தை கச்சிதமாகப் பொருத்தி அதன்மேல் விக்கை வைத்துள்ளார். இது பார்ப்பதற்கு எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்தாதவாறு இருந்த நிலையிலும், சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வசமாக மடக்கிப் பிடித்துள்ளனர். 1.5 கிலோ தங்கத்தை ஆசிக்கிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்'-துரைமுருகன் அதிரடி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
'Removal of Jaber Sadiq from DMK'-Duraimurugan takes action

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்கை நிரந்தமாக நீக்கி திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக்தான் அந்த நபர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Next Story

வாஷிங் மிஷினில் கட்டுக் கட்டாக பணத்தை அடுக்கி கடத்தல்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023


 

Smuggling of money by stacking it in a washing machine

ஆந்திர பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் வாஷிங் மிஷின்கள் ஏற்றி விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக விசாகப்பட்டினம் விமான நிலைய காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், நேற்று (25-10-23) விமான நிலைய காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சரக்கு ஆட்டோவில் வாஷிங் மிஷின்கள் கொண்டு செல்வதை பார்த்த காவல்துறையினர், அந்த வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 6 வாஷிங் மிஷின்கள் புதிதாக ‘சீல் பிரிக்காமல்’ காணப்பட்டது. 

 

இதுகுறித்து சரக்கு ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதில் சந்தேகமடைந்த விமான நிலைய காவல்துறையினர், 6 வாஷிங் மிஷின்களையும் கீழே இறக்கி சோதனை செய்து திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் வாஷிங் மிஷின்களில் ரூ.1.30 கோடி பணமும், 30 புதிய செல்போன்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதில் இருந்த பணம் மற்றும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.