style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அரியானாவில் பசு திருடியதாக வாலிபர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலத்தில்பில்வால் மாவட்டம் பெக்ரோலா கிராமத்தில் பசுவை ஒரு வாலிபர்கடத்தி கொன்றதாக கூறப்பட்ட நிலையில் அந்த வாலிபரை பலர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் உடலில்14 இடங்களில் காயமடைந்த அந்த வாலிபர் துடிதுடித்து இறந்துபோனார். ஆனால் போலீஸ் தரப்பில் அந்த நபருக்கு ஏற்கனவே குடலிறக்க நோய் இருந்ததால் தாக்கியவுடன் இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தானில் பசு திருடியதாக ஒருவர் அடித்து கொல்லப்பட்டார் அந்த சம்பவம் பெரு சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில் பசு பாதுகாலவர்கள் என்ற பெயரில் நடக்கும் கொலைகளுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில்கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.