Skip to main content

ஒரே மேடையில் இரண்டு காதலிகளை திருமணம் செய்த இளைஞர்!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021
chandhu maurya

 

சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தின் விவசாயியும், கூலித்தொழிலாளியுமான 24 வயது சந்து மௌரியா, தனது இரண்டு காதலிகளையும், ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் சுமார் 500 பேர் முன்னிலையில் நடந்துள்ளது.

 

சந்து மௌரியா, தந்து  டோகாபால் என்ற பகுதியில் வேலை ஒன்றிற்காக செல்லும்போது, சுந்தரி காஷ்யப் என்ற பெண்ணை சந்திக்க, இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதன் பிறகு ஒரு வருடம் கழித்து, ஹசீனா பாகேல் என்ற இன்னொரு பெண், உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சந்துவின் கிராமத்திற்கு வந்தபோது, அவர் மீது காதல் கொண்டார்.

 

ஹசீனா தனது காதலை சந்து மௌரியாவிடம் வெளிப்படுத்தியபோது, தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதை சந்து ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் ஹசீனா, தொடர்ந்து சந்துவுடன் தொடர்பில் இருக்க, ஒரு கட்டத்தில் சந்து காதலித்த இரு பெண்களும், ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து சந்து மௌரியாவைக் காதலித்து வந்தார்கள்.

 

இதனைத் தொடர்ந்து ஹசீனா, சந்துவின் வீட்டிற்கே வந்து வாழத் தொடங்யுள்ளார். இதை கேள்விப்பட்ட சுந்தரி காஷ்யப்பும் சந்து வீட்டிற்கு வந்துள்ளார். மூவரும் திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது பற்றி உறவினர்களும், கிராமத்தினரும் கேள்வி எழுப்பவே தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். 

 

இந்த திருமண நிகழ்வு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.