Skip to main content

ரயில்வேயிடம் 35 ரூபாய்காக இரண்டு ஆண்டு போராடிய இளைஞர்: ஜிஎஸ்டி பிடித்தம் போக ரயில்வே கொடுத்த தொகை...

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதன்பின் டிக்கெட்டை கேன்சல் செய்த போது இளைஞர் ஒருவருக்கு 33 ரூபாய் ஜிஎஸ்டி வரி பிடிக்கப்பட்டுள்ளது.

 

youngster asks for refund of 35 rupees from railways but get 33 rupees after gst detention

 

 

ராஜஸ்தானை சேர்ந்த சுஜித் சுவாமி (வயது 30) என்ற  பொறியாளர் கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் கோட்டாவில் இருந்து டெல்லி செல்ல ரயில்வே டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார். வேறு வேலை இருந்ததால் பின்னர் டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்.  

ரூ.765 செலுத்தி அவர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ரத்து செய்ததால் சேவை கட்டணம் பிடிக்கப்பட்டு  ரூ.665 அவரது வங்கி கணக்குக்கு வந்துள்ளது. சேவைக்கட்டணத்துடன் சேர்த்து ரூ.100 பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ரூ.65 மட்டுமே பிடித்தம் செய்திருக்க வேண்டும். கூடுதலாக ரூ.35 அவருக்கு வரியாக பிடித்தம் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் ரயில்வே துறையை தொடர்புகொண்டு கேட்ட போது சரியான பதில் இல்லை. எனவே அவர் நீதிமன்றத்தை அணிகினார். அப்போது ரயில்வே சார்பில், "அவர் டிக்கெட் முன்பதிவு செய்தபோது ஜிஎஸ்டி அமலில் இல்லை, அதற்கு பிறகு தொகை அனுப்பியதால் ஜிஎஸ்டி தொகை பிடித்தம் செய்யப்பட்டது" என தெரிவித்தது. இதையடுத்து ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே தான் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டேன் என கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.

பின்னர் மீதி தொகையை தர ஒப்புக்கொண்ட ரயில்வே நிர்வாகம் தற்போது அவரது வங்கிக்கணக்கில் அந்த தொகையை செலுத்தியுள்ளது. ஆனால் அதிலும் 35 ரூபாய்க்கு பதிலாக 33 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளது. இதனை பற்றி விசாரித்த போது மீதமுள்ள தொகை ஜிஸ்டி வாரியாக பிடித்துக்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு நடந்த இந்த சம்பவம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.