Skip to main content

வயதை வைத்து விமர்சனம்; பாஜக கவுன்சிலரை வறுத்தெடுத்த இளம் வயது பெண் மேயர்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

arya rajendran

 

கேரளாவில் கடந்த வருடம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுர மேயராக தேர்ந்தெடுப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதான இவர், இந்தியாவின் இளம் வயது மேயர்களில் ஒருவர். இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன. இந்தநிலையில் தன்னை வயதை வைத்து விமர்சித்த பாஜக கவுன்சிலரை ஆர்யா ராஜேந்திரன், வறுத்தெடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

பாஜக கவுன்சிலர் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆர்யா ராஜேந்திரனை அவரது வயதை வைத்து விமர்சிக்கும் விதமாக பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், "பொருட்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ளவை. மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. மேயர் நாற்காலியில் அமர்ந்து விளையாடும் ஏ.கே.ஜி மையத்தின் எல்.கே.ஜி குழந்தைகளால் அழிக்கப்படுவதற்கான பொருட்கள் அல்ல" என கூறியிருந்தார். ஏ.கே.ஜி மையம் என்பது கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தலைமையகம் ஆகும்.

 

இதனைத்தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் ஆர்யா ராஜேந்திரன், பாஜக கவுன்சிலரை வறுத்தெடுக்க தொடங்கினர். ஆர்யா ராஜேந்திரன் அந்த கவுன்சிலரை நோக்கி, "நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளிர்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த சபையில் உள்ள எவரும் இங்கு நியாயமான எதையும் கூறலாம். நீங்கள் அனைவரும் என்னை தனிப்பட்ட முறையில் வயது, முதிர்ச்சி தொடர்பாக விமர்சித்துள்ளீர்கள். ஆனால் இப்போது, நான் இதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இன்றும், இங்குள்ள சில உறுப்பினர்கள் இத்தகைய கருத்துக்களை கூறினர். இந்த வயதில் நான் மேயராகிவிட்டால், அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும், அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும்" என்றார்.

 

ஆர்யா ராஜேந்திரன் பேசுகையில் பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட முயன்றனர். இருப்பினும் ஆர்யா ராஜேந்திரன் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களை பார்த்து, "இளைய தலைமுறையினர் உட்பட உங்களை பின்பற்றுபவர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிடும் கருத்துக்களை நான் உங்களுக்குக் காட்டினால், இந்த மேயரும் வீட்டில் உள்ள சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் போன்றவர் என்பதை நீங்கள் நினைவில் கொள்வீர்கள். யார் ஒரு பெண்ணை அவமதித்தாலும் அது மோசமானது.நீங்கள் கொடுப்பதை மட்டுமே நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

 

ஆர்யா ராஜேந்திரன் பாஜக கவுன்சிலருக்கு பதிலளித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலர் ஆர்யா ராஜேந்திரனை பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.