Skip to main content

பேஸ்புக்கை அதிகம் பார்க்காதே... மனைவியின் செல்போனை பார்த்து கோபமான கணவன்... நடந்த அதிர்ச்சி சம்பவம்!  

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

ராஜஸ்தானைச் சேர்ந்த அஜஸ் முகமது கான். இவர் நையினா மங்ளானி என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இருவரும் நண்பர்களாக அடிக்கடி பேசி நட்பை வளர்த்துள்ளனர். இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலிக்கும் போது இருவரும் அடிக்கடி பேஸ்புக் மூலம் சாட் செய்து கவந்துள்ளனர். பின்பு இவர்களின் காதல் இரண்டு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து இரு வீட்டு சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

 

lovers



திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு சில நாட்களில் நையினா மங்ளானி பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் நைனா அவரது கணவருடன் நேரத்தை செலவிடாமல் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

lovers



இந்நிலையில் அஜஸ் முகமது கான் அவரது மனைவி நையினாவின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது பேஸ்புக் நண்பர்களுடன் அதிகளவில் சாட் செய்தது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அஜஸ் முகமது கான் அவரது மனைவி நையினாவிடம் கேட்டுள்ளார். இதனால் மீண்டும் கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கோபப்பட்டு நையினா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனைத்தொடர்ந்து நையினாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதற்கு பிறகு இருவரும் ஒன்றாக பல இடங்களை சுற்றி உள்ளனர். அப்போது நையினா பேஸ்புக்கை மீண்டும் பயன்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் நையினாவை டெல்லி ஜெய்ப்பூர் ஹைவேஸ் சாலைக்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.


மேலும் மனைவியின் முகத்தில் கல்லைப் போட்டு தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹைவேஸ் பகுதியில் நையினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு நையினாவின் கணவர் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.