Skip to main content

நிச்சயம் முடிந்த ஜோடியின் பெற்றோர்கள் இடையே மலர்ந்த காதல்... நிறுத்தப்பட்ட திருமணம்... நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் பெற்றோர் இடையே காதல் மலர்ந்து தப்பியோடி விட்டதால் திருமணம் தடைப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் துணிக்கடை வைத்திருக்கும் தொழிலதிபர் அர்ஜுன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். தொழிலதிபர் அர்ஜுன் தன் மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துதுள்ளார். இதனையடுத்து இளம் ஜோடிகளுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அப்போது பிப்ரவரி மாதம்இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். திருமண வேலைகள் தொடர்பாக இரண்டு வீட்டு பெரியவர்களும் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.   

 

marriage



அப்போது துணிக்கடை தொழிலதிபருக்கும், வைர கைவினைஞரின் மனைவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களுடைய காதல் விவகாரம் அவர்களது பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்கு  சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த காதல் விவகாரம் குறித்து தெரிய வரும் முன்னரே துணிக்கடை தொழிலதிபர் அர்ஜுனும், வைர கைவினைஞரின் மனைவி ஆகிய இருவரும் ஜோடியாக தலைமறைவாகி விட்டனர். இதனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளும், அவர்களது வீட்டாரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு இந்த சம்பவம் குறித்து இரு வீட்டாரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மேலும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் திருமணமும் நிறுத்தப்பட்டது. 


இந்த சம்பவம் குறித்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது என்கின்றனர். அதில்  துணிக்கடை தொழிலதிபருக்கும், அந்த பெண்ணுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே காதல் இருந்துள்ளது. ஆனால் காதலித்த போது இருவரும் திருமணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது என்கின்றனர். பின்பு தான் தொழிலதிபர் அர்ஜுன் காதலித்த அந்த பெண்ணை வைர கைவினைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்த போது  தங்களுடைய பழைய காதலை புதுப்பித்து கொண்டுள்ளனர். இவர்களது காதலால் தங்களுடைய மகன் மற்றும் மகள் திருமணத்திற்கு தடையாக இருக்கும் என்று கூட நினைத்து பார்க்காமல் இருவரும் தலைமறைவான சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.