Advertisment

விரைவில் ராமருக்கு சிலை அமைக்கப்படும்- யோகி ஆதித்யநாத்...

குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயர்ந்த சிலை ஒன்று நிறுவப்பட்டு, கடந்த 31ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை போன்றே மற்றொரு பிரமாண்ட சிலை மராத்திய அரசர் சிவாகிக்கு அரபிக்கடலில் நிறுவப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்ட ராமர் சிலையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைக்க முடிவு செய்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து நேற்று பேசியுள்ள உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் ராமர் சிலை அமைப்பதற்கான திட்டம் கடைசி கட்டத்தில் உள்ளது. நிச்சயம் ராமர் சிலை அங்கு நிறுவப்படும். சிலை அமைக்க 2 இடங்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது. எதிர்வரும் காலத்திலும் அமைக்கப்படும். அயோத்தி நவீன நகரமாகும் என்றார்.

Advertisment
yogi adithyanath
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe