மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தின் இட்டாவா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், "இன்று உலகின் எந்த மூலையில் தேர்தல் நடந்தாலும், அங்கு இந்தியாவையும், மோடியையும் பற்றி மட்டுமே பேச்சு நடக்கிறது. இவ்வளவு ஏன் 2016 ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட, அவர் வெற்றி பெற்றால் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபடுவதை போல நான் அமெரிக்காவின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என்று தான் கூறினார்" என்று பெருமிதத்துடன் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.